வலிய வந்த தயாரிப்பாளர்; ‘மிதப்பில்’ இருந்த இயக்குநருக்கு காத்திருந்த ஷாக்கிங் நியூஸ்!

வலிய வந்த தயாரிப்பாளர்;  ‘மிதப்பில்’  இருந்த இயக்குநருக்கு காத்திருந்த ஷாக்கிங் நியூஸ்!

நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் சார்’ என்று தயாரிப்பாளர் சொல்ல… இயக்குனருக்கு உற்சாகம் தாங்கவில்லை.

 

பெயரிலேயே புத்திசாலித்தனம் கொண்ட  அந்த இளம் தயாரிப்பாளர், படம் தயாரிக்க வந்து ஏழெட்டு வருஷம் ஆகப்போகுது. வரிசையாக படம் எடுத்தாலும்… எந்தப்படமும் இதுவரை பெரிதாகப் போகவில்லை! பெரிய அளவில் பணத்தை சினிமாவில் இழந்திருந்தாலும் ; இப்போதுவரை படம் எடுப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை! அவரால மட்டும் எப்படி முடிகிறது என்று சினிமா இண்டஸ்ட்ரியில் இருக்கும் பலரும் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.

வலிய வந்த தயாரிப்பாளர்;  ‘மிதப்பில்’  இருந்த இயக்குநருக்கு காத்திருந்த ஷாக்கிங் நியூஸ்!

கரென்ட்டா நாலு படம் பண்ணிக்கிட்டு இருக்கிறார்.நாலு படமும் முழுவதுமாக முடியாமல் அரைகுறையாக நிற்கிறது.இதெல்லாம் எப்போது முடிந்து திரைக்கு வரும் என்பது சம்பந்தப்பட்ட படங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும் தெரியாது! இப்படியான சூழலில், ஒரு இரவு நேர பார்ட்டியின் போது தேசிய விருது வாங்கிய தென் மாவட்டத்தைச் சேர்ந்த இயக்குநரைச் சந்தித்திருக்கிறார்.இருவருக்கும் இதற்கு முன் அறிமுகமில்லை.தயாரிப்பாளரே வாலண்டரியாகப் போய் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசியிருக்கிறார்.நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் சார்’ என்று தயாரிப்பாளர் சொல்ல… இயக்குனருக்கு உற்சாகம் தாங்கவில்லை.

வலிய ஒரு தயாரிப்பாளர் வருகிறார்.அட்வான்ஸை வாங்கிப் போட்டுட்டு ஒரு படத்தைப் பண்ணுவோம் என்று என்று கனவில் மிதக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த ‘மிதப்பில்’ இருவரும் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். போட்டோ எடுத்த கையோடு தன்னோட டிவிட்டர் பக்கத்திலும் அந்தப் போட்டோவைப் போட்டு விரைவில் புதுப்பட அறிவிப்பு வரும் என்று தட்டிவிட… இயக்குனருக்கு அட்வான்ஸே கைக்கு வந்து சேர்ந்த மாதிரி உற்சாகமாகிவிட்டார்.

வலிய வந்த தயாரிப்பாளர்;  ‘மிதப்பில்’  இருந்த இயக்குநருக்கு காத்திருந்த ஷாக்கிங் நியூஸ்!

அந்த உற்சாகம் ஒரு ராத்திரிக்கு மேல் நீடிக்கவில்லை என்பதுதான் சோகம். அடுத்த நாள் எனது வெல்விஷர் ஒருவரிடம் போனைப் போட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.எதிர் முனையில் போனை அடுத்தவருக்கு இந்த செய்தி மகிழ்ச்சியாக இல்லை! சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை இயக்குனருக்கு விளக்கிச் சொல்லியிருக்கிறார்.மண் மனம் மாறாமல் படம் எடுக்கும் அந்த இயக்குனரின் படம் இரண்டு ரிலீசாகாமல் முடங்கிக் கிடக்கிற நிலைமையில் மூன்றாவதும் அப்படியாகிட வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.

இது தெரியாமல் தயாரிப்பாளரும் தினம் போனைப் போட்டுக்கிட்டே இருக்கிறார்… கொரானா வைரஸ் அலர்ட்டுதான் கேக்குதே தவிர,இயக்குனரின் குரல் மட்டும் கேட்கவே இல்லையாம்..!

Share this story