சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய நடிகை ரியா…

சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய நடிகை ரியா…

கடந்த ஜூன் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து  அவருடைய தற்கொலைக்கு காரணம் பாலிவுட்டில் நடைபெறும் வாரிசு அரசியல்தான் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது..

சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய நடிகை ரியா…

இதைதொடர்ந்து 40க்கும் மேற்பட்ட பிரபலங்களை அழைத்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சுஷாந்த்தின் தந்தை கே. கே. சிங் பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட ஆறு பேர் மீது சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்துள்ளார்.

சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய நடிகை ரியா…

அந்த புகாரில், ரியா சக்ரோபாரதி, ரூபாய் 15 கோடியை சுஷாந்தை ஏமாற்றி, வேறு ஒரு அக்கவுண்ட்டுக்கு மாற்றியுள்ளதாக அவர் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் ரியாவும் இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டு, தனது மகனுக்கு பொருளாதார ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் அழுத்தங்கள் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய நடிகை ரியா…

மேலும், “ஜூன் 8 ஆம் தேதி வரை சுஷாந்துடன் நேரடி தொடர்பில் இருந்துள்ள ரியா கடைசியாக சுஷாந்திடம் இருந்து செல்லும்போது, அவரின் க்ரெடிட் கார்டு, லேப்டாப், இன்னும் சில மெடிக்கல் ஃபைல்கள் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை மும்பை மற்றும் பாட்னா காவல் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்..

சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய நடிகை ரியா…

இந்நிலையில் புகார் சுமத்தப்பட்ட ரியா சக்ரோபாரதி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த விவகாரம் குறித்து அவரது மனுவில், “சுஷாந்த் சிங்கின் மரணத்தில், அவரது தந்தை என்னை பற்றி தவறாக புகாரளித்துள்ளார். அவருக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தன் மீது வீண் பழி சுமத்துகிறார் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு சுஷாந்த்தும் தானும் ஒரு ஆண்டு வரை லிவிங்-இன்- ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், தற்போது அவரின் மரணம் மனரீதியாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரியா தெரிவித்துள்ளார். அவரின் மரணத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய நடிகை ரியா…

மேலும், தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்களும், பாலியல் ரீதியான மிரட்டல்களும் வருவதாகவும், பாட்னாவில் வழக்கு நடந்தால் ஒருதலைபட்சமாக தான் வழக்கு நடக்கும் எனவும்,  இவ்வழக்கை மும்பை போலீஸ் விசாரிக்க வேண்டும்” என்று கேட்டுகொண்டுள்ளார்.

Share this story