கார் விபத்தில் சிக்கி பிரபல நடிகை படுகாயம்… ரசிகர்கள் சோகம்…

கார் விபத்தில் சிக்கி பிரபல நடிகை படுகாயம்… ரசிகர்கள் சோகம்…

பிரபல கன்னட நடிகையும், அவரது தோழியும் அதிகாலை கார் விபத்தில் சிக்கி கயமடைந்தனர்.
நடிகை ரிஷிகா சிங், பிரபல கன்னட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபுவின் மகளாவார். ரோகினி சிங் என இயற்பெயர் கொண்ட  இவர், சினிமாவுக்காக ரிஷிகா சிங் என பெயரை மாற்றிக்கொண்டார். துனியா விஜய் ஜோடியாக ‘காந்தேராவ’ என்ற கன்னட படத்தின் மூலம் 2011ல் அறிமுகமானவர் நடிகை ரிக்ஷிகா சிங்.
கார் விபத்தில் சிக்கி பிரபல நடிகை படுகாயம்… ரசிகர்கள் சோகம்…
அதையடுத்து பல நகைச்சுவைத் திரைப்படமான ‘கல்லா மல்லா சுல்லா’ படத்தில் நடித்தார்.  ரிஷி, பெங்கி பிருகாலி, மாணிக்யா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இளம் வயதிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அதிகம் பாப்புலரானார்.
கார் விபத்தில் சிக்கி பிரபல நடிகை படுகாயம்… ரசிகர்கள் சோகம்…
கன்னட நடிகர் ஜெய்  ஜக்தீஷின் இளைய மகளுக்குப் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நடிகை ரிஷிகா, நிகழ்ச்சியை முடித்துவிட்டு  நடிகர் ஜெய் ஜக்தீஷின் மற்றொரு மகள் அர்பிதாவுடன் பெங்களூருக்கு திரும்பியுள்ளார்.. நேற்று அதிகாலை,  எலஹங்கா – மாவல்லிபுரா சாலையில் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாது..
கார் விபத்தில் சிக்கி பிரபல நடிகை படுகாயம்… ரசிகர்கள் சோகம்…
இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது.. அதோடு நடிகை ரிஷிகா சிங், ஜெய் ஜததீஷின் மகள் அம்ரிதா, காரை ஓட்டி வந்த அவர்களது நண்பர் உட்பட மூன்று பேருமே படுகாயம் அடைந்தனர். பின்னர், அக்கம் பக்கத்தினர்  மீட்டு அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.  அவர்களின் கை, கால்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

Share this story