அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் மெகா பட்ஜெட் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது!
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் கோரட்டலா சிவா இயக்கும் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அந்தப் படத்திற்கு ‘AA21’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பதிவிட்டுள்ள அல்லு அர்ஜுன்
“எனது அடுத்த படம் # AA21-க்காக கோரட்டலா சிவாவுடன் கூட்டணி வைப்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நான் நீண்ட காலமாக இதை எதிர்பார்த்திருந்தேன். சுதாகர் முதல் படத்திற்காக எனது வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
Very much elated to announce my next film #AA21 with Koratala Shiva garu . Been looking forward for this for quiet a while . My best wishes to Sudakar Garu for his 1st venture . Sandy , Swathi & Nutty this is my way of showing of my love for you guys . pic.twitter.com/uwOjtSAMJV
— Allu Arjun (@alluarjun) July 31, 2020
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ‘புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஊரடங்கு முடிந்ததும் பட வேலைகள் மீண்டும் தொடங்கப் பட இருக்கிறது. மேலும் இந்தப் படத்தில் சந்தன மரக் கடத்தல் காரனாக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார்.
அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமாரின் மூன்றாவதாக இணையும் படம் புஷ்பா. முன்னதாக, இருவரும் ஆர்யா மற்றும் ஆர்யா 2 படங்களில் பணிபுரிந்துள்ளனர்.