சிரஞ்சீவிக்கு பிடிக்கவில்லையாம்.. ‘லூசிஃபர்’ தெலுங்கு ரிமேக்கிலிருந்து விலகிய இயக்குநர்..!!
1596179758000
ஒரு மொழியில் ஹிட்டாகும் படங்கள் தற்போது மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படும் வழக்கம் அதிகரித்து வருகிறது.. தமிழிலிருந்து பல திரைப்படங்கள் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கும் அதே வேளையில் , மலையாள சினிமாவில் இருந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகின்றன..
அந்தவகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி, மலையாளத் திரைப்பட உலகில் பல வசூல் சாதனைகளைப் படைத்த ‘லூசிஃபர்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. நடிகர் ப்ரித்விராஜின் இயக்கிய முதல் படமான இதில் மோகன்லால் நடித்திருந்தார். மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூலைக் குவித்த முதல் படம் ‘லூசிஃபர்’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார்.. அவரது மகனும் நடிகருமான ராம் சரண் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.. . இந்த லூசிபர் படத்தின் ரீமேக்கை பிரபாஸ் நடித்த சாஹோ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சுஜித் இயக்க இருந்தார்..
தெலுங்கிற்கு ஏற்றவாறு ‘லூசிஃபர்’ படத்தில் சில மாற்றங்களைச் செய்ய சொல்லியிருக்கிறார் சிரஞ்சீவி. தான் செய்துள்ள மாற்றங்கள் குறித்து சிரஞ்சீவியிடம் கூறிய போது, அது அவருக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலிருந்து சுஜீத் விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு பதிலாக ‘கத்தி’ தெலுங்கு ரீமேக்கான ‘கைதி நம்பர் 150’ என்ற படத்தை இயக்கிய வி.வி.விநாயக், இந்தப்படத்தை இயக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் சிரஞ்சீவிக்கு ஏற்ற வகையில் கதையில் மாற்றம் செய்யும் பணிகளை மும்முரமாகச் செய்து வருகிறாராம். விரைவில் இயக்குநர் மாற்றம் தொடர்பாகவும், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகர்கள் தொடர்பாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்ப்ட்கிறது.