சிஏஏ போராட்டத்தில் கலந்துகொள்ள 5 கோடி வாங்கினாரா? பாலிவுட்டில் தீபிகா படுகோனே மீது கிளம்பிய சர்ச்சை!

சிஏஏ போராட்டத்தில் கலந்துகொள்ள 5 கோடி வாங்கினாரா? பாலிவுட்டில் தீபிகா படுகோனே மீது கிளம்பிய சர்ச்சை!

சுஷாந்தின் இறப்பு பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதிலிருந்து மிகப்பெரிய பாலிவுட் பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கின. தற்போது பாலிவுட்டில் மீண்டும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.
சிஏஏ போராட்டத்தில் கலந்துகொள்ள 5 கோடி வாங்கினாரா? பாலிவுட்டில் தீபிகா படுகோனே மீது கிளம்பிய சர்ச்சை!
நடிகை தீபிகா படுகோனே ஜேஎன்யூ பல்கலைக்கழக போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். தீபிகா அந்த போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னணியில் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளதாகவும்வும், அதற்காக 5 கோடி பணம் பெற்றுள்ளதாகவும் ஒய்வு பெற்ற RAW ஏஜென்ட் NK சூட் என்பவர் தெரிவித்திருந்தார். இது பாலிவுட்டில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
CAA-NRC के विरोध में उतरी दीपिका ...
முன்னாள் RAW அதிகாரி என்.கே.சூத் இந்த வீடியோவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார், இந்த வீடியோவில் நீங்கள் காணலாம், என்.கே. சூத் ‘தீபிகா படுகோனுக்கு அனில் முசாரத்துடன் தொடர்பு உள்ளது’ என்று கூறியிருந்தார். முசாரத் இம்ரான் கானுடன் மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) எதிராக நடந்து வரும் போராட்டங்களில் கலந்து கொள்ள தீபிகா படுகோனே ரூ .5 கோடி பெற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது இந்த விவகாரம் மீண்டும் பாலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது. தீபிகாவைப் பற்றிய இந்த வீடியோ தற்போது மீண்டும் சோசியல் மீடியாக்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Share this story