மற்றுமொரு பிரபல நடிகர் தற்கொலை… அதிர்ச்சியில் இந்தி திரையுலகம்!

மற்றுமொரு பிரபல நடிகர் தற்கொலை… அதிர்ச்சியில் இந்தி திரையுலகம்!

பிரபல மராத்தி நடிகர் அசுதோஷ் பக்ரே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அசுதோஷுக்கு 32 வயது. அசுதேஷ் மகாராஷ்டிராவின் நந்தேடில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அசுதோஷின் உடல் நந்தேடில் உள்ள அவரது பங்களாவில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்றுமொரு பிரபல நடிகர் தற்கொலை… அதிர்ச்சியில் இந்தி திரையுலகம்!
அசுதோஷ் தற்கொலை செய்தி மராத்தி திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்ய என்ன காரணம் என்பது இதுவரையில் தெரியவரவில்லை.  அசுதோஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை மயூரி தேஷ்முகின் கணவர். மயூரி மற்றும் அசுதோஷ் 21 ஜனவரி 2016 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

அசுதேஷ் தற்கொலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திரைத்துறையில் பலர் தற்கொலை செய்து வருவது அதிகமாகி வருகிறது. ஊரடங்கால் மக்கள் வீட்டில் முடங்கியுள்ளது அவர்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. அந்த மன அழுத்தம் தான் தற்கொலைக்குத் தூண்டுகிறது என்றும் கூறப்படுகிறது.

Share this story