மீண்டும் வரப்போகிறதா!?… சூர்யா-கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி…!

மீண்டும் வரப்போகிறதா!?… சூர்யா-கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி…!

சூர்யா-கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி என்றாலே ஒரு கிளாஸான மாஸ் படமாகத் தான் இருக்கும். இதற்கு முன்னர் இக்கூட்டணியில் வெளிவந்த ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ போன்ற படங்கள் இன்றளவும் பலருக்கு ஃபேவரைட். இவ்விரு படங்களிலுமே ‘ஹாரிஸ்ஜெயராஜ்’ தான் இசையமைப்பாளராக இருந்தார். GVM-ன் பல படங்களுக்கு ஹாரிஸ் தான் இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வரப்போகிறதா!?… சூர்யா-கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி…!
GVM முதலில் ‘துருவ நட்சத்திரம்’ கதையை சூர்யாவுக்குதான் ரெடி பண்ணினார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா அக்கதையை நிராகரித்தார். பின் வேறு ஒரு கதையை GVMமிடம் ரெடி பண்ண சொன்னதாகவும் தகவல்கள் வெளியானது. பின்னர் தான் அப்படம் ‘விக்ரம்’ கைக்கு சென்று படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்த நிலையில் விக்ரம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டும் படமாக்க வேண்டி இருப்பதாலும் மேலும் சில பைனான்ஸ் பிரச்சினைகளாலும் படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கின்றது. இதற்கிடையில் GVM சூர்யாவுக்காக மீண்டும் ஒரு கதையை உருவாக்கினார். இக்கதையின் ஒன்லைன் சூர்யாவுக்கு மிகவும் பிடித்து போனது. இப்படத்தினை ‘வேல்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் கடந்த ஆண்டு வெளியாகின.
மீண்டும் வரப்போகிறதா!?… சூர்யா-கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி…!
அதோடு சரி, பின்பு இப்படத்தினை பற்றி எந்த ஒரு அப்டேட்-ம் வரவில்லை. எனவே, இப்படம் கைவிடப்பட்டது என சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்தன. சூர்யாவும் சூரரைப்போற்று ,அருவா படங்களில் பிஸி ஆனதாலும் இப்படம் பற்றி ஏதும் கருத்து கூறவில்லை. இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில்,  இப்படம் கைவிடப்படவில்லை என்றும் கதையை முழுமையாக முடிக்கும் படியும் GVMமிடம் கூறியிருப்பதாவும் சூர்யா தெரிவித்துள்ளார்.இதை வைத்து பார்க்கும் போது பாண்டிராஜ் இயக்கும் படம் மற்றும் அருவா படத்துக்கு பின் இப்படத்தினை தொடங்க வாய்ப்புகள் அதிகம் என தெரிகின்றது. வருண் நடிப்பில் GVM இயக்கியுள்ள ‘ஜோஷ்வா…இமை போல் காக்க’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
-மா மணிகண்டன்

Share this story