மாஃபியா கும்பல் ரியாவை பலிகடா ஆக்கப்பார்க்கிறதா??- நடிகை கங்கனா பகீர் குற்றச்சாட்டு…
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்து அதிகளவு பேசப்பட்டு வருகிறது..
சுஷாந்த் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியதை அடுத்து, சுஷாந்தின் முன்னாள் காதலி அங்கிதா, அதன்பின் அவர் காதலித்து வந்ததாக கூறப்படும் ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது..
இன்னொரு பக்கம் சுஷாந்த் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சுஷாந்தின் தந்தை, நடிகை கங்கணா, பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, சுஷாந்தின் காதலி என்று அறியப்படும் ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பிஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் நடிகை ரியா மீது சுஷாந்த் சிங்கைத் தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் அளித்திருக்கிறார்.. அந்தப் புகாரில், ரியா சுஷாந்தின் வங்கிக் கணக்கிலிருந்து 15 கோடி ரூபாய் பணத்தை எடுத்து வேறு நபருக்கு அனுப்பிவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.. ரியா உள்ளிட்டோரே சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் எனக் கூறியிருக்கிறார்..
அதனடிப்படையில் ரியா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆரம்பம் முதலே சுஷாந்த் தற்கொலை குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் கங்கணா ரனாவத், ரியா இந்த விவகாரத்தில் பலிகடா ஆக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து அவர் குழுவின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ” நிச்சயமாக ரியா பணத்தைச் சுரண்டுபவர்தான். ஆனால், சுஷாந்த் மட்டுமே அவரது வருமானத்துக்கான ஆதாரமாக இருந்தார். சுஷாந்த் மரணத்துக்குப் பிறகு அவர் ஏன் அக்தர்களை (ஃபர்ஹான் அக்தர்) சந்திக்க வேண்டும். சுஷாந்தைக் கொல்ல அவருக்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா? அல்லது மாஃபியா கும்பல் அவரைப் பயன்படுத்திக் கொள்கிறதா? அந்தத் தற்கொலை கும்பல் ரியாவைப் பலிகடா ஆக்குகிறதா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது..
Sure Rhea is a gold digger but Shushant was her only source of income, after his murder she rushed to meet Akhtars, why? does she have valid reason to kill Shushant? Or did the mafia use her ? Is suicide gang making her the scapegoat now ?#JusticeforSushantSingRajput pic.twitter.com/JLQEtrVVBp
— Team Kangana Ranaut (@KanganaTeam) July 29, 2020