சுஷாந்த் சிங் – ரியா பிரிவுக்கு நான் காரணமில்லை- பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தந்தை வாக்குமூலம்…

சுஷாந்த் சிங் – ரியா பிரிவுக்கு நான் காரணமில்லை-  பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தந்தை வாக்குமூலம்…

பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவாகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது.. நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து  பாலிவுட்டில் நடைபெறும்  வாரிசு அரசியல் குறித்து பலரும் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.. மேலும் சுஷாந்தின் தற்கொலைக்கு ரியா சக்ரபோர்த்தி, மகேஷ் பட், கரண் ஜோஹர், சல்மான் கான் உள்ளிட்டவர்களே காரணம் என குற்றம் சாட்டி வருகின்றனர்..

சுஷாந்த் சிங் – ரியா பிரிவுக்கு நான் காரணமில்லை-  பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தந்தை வாக்குமூலம்…

சுஷாந்தின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கூறியதையடுத்து,  40க்கும் மேற்பட்ட பிரபலங்களை அழைத்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று, சுஷாந்தின் தந்தை ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்..

சுஷாந்த் சிங் – ரியா பிரிவுக்கு நான் காரணமில்லை-  பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தந்தை வாக்குமூலம்…

அதோடு, சமீபத்தில் தயாரிப்பாளர் மகேஷ் பட்டுடன் சுஷாந்தின் காதலி ரியா மிக அன்யோன்யமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியானது. இதனால் சுஷாந்த்-ரியா சக்ரபோர்த்தியின் பிரிவுக்கு மகேஷ் பட் தான் காரணம் எனவும் செய்திகள் வெளியாகின..

சுஷாந்த் சிங் – ரியா பிரிவுக்கு நான் காரணமில்லை-  பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தந்தை வாக்குமூலம்…

இந்தநிலையில் மும்பை காவல் நிலையத்தில் வாக்கு மூலத்தை பதிவு செய்த தயாரிப்பாளர் மகேஷ் பட், “நான் நெபோடிசத்தை ஒருபோதும் ஆதரித்ததில்லை. நானே பல புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளேன்.. சுஷாந்த் சிங்கை நான் இரண்டுமுறை மட்டுமே பார்த்துள்ளேன்.. சுஷாந்த்தும் ரியாவும் பிரிந்ததற்கு நான் எந்தவகையிலும் காரணம் இல்லை.. ரியாவை சுஷாந்துக்கு எதிராக நான் தூண்டிவிடவும் இல்லை” என்று கூறியுள்ளார்.

Share this story