“படம் ரிலீஸ்னா போதும், ஒரு பிரச்சனையா தூக்கிட்டு வந்துருவாங்க”… சூர்யா குறித்து சர்ச்சை பதிவிட்ட மீரா… கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

“படம் ரிலீஸ்னா போதும், ஒரு பிரச்சனையா தூக்கிட்டு வந்துருவாங்க”… சூர்யா குறித்து சர்ச்சை பதிவிட்ட மீரா… கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

மீரா மிதுன் பற்றிய செய்தி என்றால் சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது. சில தமிழ் படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள மீரா மிதுன் பிக்பாஸில் பங்குபெற்றதிலிருந்து தமிழக முழுவதும் பிரபலமானார். யாம் இருக்கும் இடத்தில சகல சர்ச்சைகளுக்கும் இடமுண்டு என்பது போல இவர் இருக்கும் இடங்களில் எல்லாம் சர்ச்சை தான். அழகி போட்டியில் பட்டம் வென்றது என ஆரம்பித்து அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. எப்போதும் அவரது பதிவுகளில் யாரைப் பற்றியாவது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
“படம் ரிலீஸ்னா போதும், ஒரு பிரச்சனையா தூக்கிட்டு வந்துருவாங்க”… சூர்யா குறித்து சர்ச்சை பதிவிட்ட மீரா… கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் EIA 2020 குறித்து கருத்து தெரிவித்திருந்தனர். அதற்கு அதிக வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்தன. மீரா மிதுன் தற்போது நடிகர் சூர்யா குடும்பத்தைப் பற்றி பதிவிட்டுள்ளார்.
“படம் ரிலீஸ்னா போதும், ஒரு பிரச்சனையா தூக்கிட்டு வந்துருவாங்க”… சூர்யா குறித்து சர்ச்சை பதிவிட்ட மீரா… கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
அதில் “இது தான் சூர்யா குடும்பத்தின் வழக்கம். அவர்கள் படம் வெளியாவதற்கு முன்பு சரியாக எதாவது ஒரு சமூக பிரச்சனை குறித்து பேசுவர். இப்போது EIA-வைக் கையிலெடுத்துள்ளனர். தமிழக மக்களிடம் கண்துடைப்பிற்காக மட்டும், பொன்மகள் வந்தாள் படத்திற்கு முன்னர் ஜோதிகா மதங்களைப் பற்றி பேசினார், சூரியா புதிய கல்விக் கொள்கை பற்றி பேசினார். இதற்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


வழக்கம் போல இந்த பதிவிற்காகவும் நெட்டிசன்கள் மீராவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Share this story