ஊரடங்கில் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட செம்பருத்தி நடிகர்… வைரலாகும் புகைப்படம்…

ஊரடங்கில் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட செம்பருத்தி நடிகர்… வைரலாகும் புகைப்படம்…

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி நம்பர் ஒன். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி  வருகிறது. முத்த மந்தரம் என்னும் தெலுங்கு சீரியலின் தழுவலான செம்பருத்தி, முழுக்க முழுக்க காதல் கதையே..அதனால் பெரியவர்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்து பல இளைஞர்களும் இந்த சீரியலுக்கு அடிமையாகி விட்டனர். சொல்லப்போனால் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
ஊரடங்கில் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட செம்பருத்தி நடிகர்… வைரலாகும் புகைப்படம்…
இப்போதுல்ல காலங்களில் திரைப்பட கலைஞர்களை விட தொலைக்காட்சி பிரபலங்கள் ரசிகர்களிடையே அதிகம் பாப்புலராகிவிடுகின்றனர்.. அந்த வரிசையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களிடையே மிகப் பிரபலம்..  டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலம் ஜீ தமிழில் அறிமுகமாகி,  தற்போது விஜேவாகவும்,  இந்த தொடரில் ஆதியின் தம்பியாக நடித்து வருபவர் கதிர்.
ஊரடங்கில் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட செம்பருத்தி நடிகர்… வைரலாகும் புகைப்படம்…
தனது கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவரும் கதிருக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளது. கொரோனா என்பதால் மிகவும் எளிமையாக தன்னுடைய நிச்சயதார்த்தை முடித்துள்ளார் கதிர். இதுகுறித்து இன்ஸ்டகிராம் பக்கத்தில்  தெரிவித்துள்ள இவர்,  தன்னுடைய வருங்கால மனைவியுடன் எடுத்து கொண்ட போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.  அதில்,” எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. லாக்டவுன் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியாமல் போனது. என்னை மன்னித்துவிடுங்கள்.
ஊரடங்கில் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட செம்பருத்தி நடிகர்… வைரலாகும் புகைப்படம்…
லாக்டவுன் நேரத்தில் இ-பாஸ் பிரச்சினைகள் காரணமாக தான் நிறைய பேரை அழைக்க முடியவில்லை. கல்யாணத்திற்கு நிச்சயம் அனைவரையும் அழைப்பேன். எல்லோரும் கண்டிப்பாக வந்து வாழ்த்த வேண்டும். உங்களுடைய அனைவரது வாழ்த்துகளையும் பெற நான் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story