லாக்டவுன் நேரத்தில் கம்முனு காதலித்த பெண்ணை கரம் பிடித்த விஜய் டிவி பிரபலம்!
விஜய் டிவியில் நுழைந்து விட்டாலே சினிமாவில் தலைகாட்டி விடலாம் என்றாகிவிட்டது. விஜய் டிவியில் நிகழ்ச்சிகளில் நாடகங்களில் நடிக்கும் கலைஞர்கள் அனைவரும் சினிமாவிற்கு ஹோல் சேலாக அனுப்பி வருகிறார்கள். முன்னணி கதாநாயகர் சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர், தீனா என்ற இந்த வரிசை நீண்டு கொண்டே போகிறது.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யோகி என்ற யோகீஸ்வரன். இவரது வித்தியாசமான நடிப்பினால் அனைவரையும் பார்த்த உடனே சிரிக்க வைத்து விடுவார்.
இவர் நித்தியானந்தாவை வைத்து பகடி செய்திருந்த ஒரு காமெடி ஷோ இணையத்தில் மிகவும் பிரபலமாகியது.
ஊரடங்கு நேரத்தில் திடீரென்று திருமணம் முடித்துள்ளார் யோகி. யோகி சௌந்தர்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இருவருமே பள்ளி மற்றும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஒன்றாக படிக்கும்போது அவர்கள் காதலிக்கவில்லை. அவர்களுடைய கல்லூரி ரீயூனியனில் சந்தித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் அதை யாரும் தெரிவித்துக் கொள்ள வில்லை. பின்னர் யோகி தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். இருவருக்கும் பிடித்துப் போக பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
ஊரடங்கு நேரமாக இருப்பதால் யாருக்கும் சொல்ல முடியவில்லை என்றாலும் ஊரடங்கிற்குப் பின்னர் அனைவரையும் அழைத்து வரவேற்பு நடத்த வேண்டும் என்றும் யோகி கூறியுள்ளார். இவருடைய திருமணத்திற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.