“உங்கள் மறைவு சினிமாத் துறைக்கே பேரிழப்பு”… சரோஜ் கான் குறித்து கண்ணீர் பதிவிட்ட பிரியாமணி !

“உங்கள் மறைவு சினிமாத் துறைக்கே பேரிழப்பு”… சரோஜ் கான் குறித்து கண்ணீர் பதிவிட்ட பிரியாமணி !

பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
“உங்கள் மறைவு சினிமாத் துறைக்கே பேரிழப்பு”… சரோஜ் கான் குறித்து கண்ணீர் பதிவிட்ட பிரியாமணி !
சரோஜ் கான் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக, சுமார் 2000 படங்களுக்கு மேல் நடன இயக்கம் செய்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி மற்றும் மாதுரி தீட்சித் ஆகியோருடன் தான் சரோஜ் அதிக ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
நடிகை பிரியா மணியும் சரோஜுடன் பணிபுரிந்துள்ளார். அவரின் மறைவு குறித்து தனது இரங்கலை தெரிவித்து பதிவிட்டுள்ளார் பிரியாமணி.
“உங்கள் மறைவு சினிமாத் துறைக்கே பேரிழப்பு”… சரோஜ் கான் குறித்து கண்ணீர் பதிவிட்ட பிரியாமணி !
“உங்களுடைய பிரிவு சினிமா துறைக்கு மிகப் பெரிய இழப்பு… நீண்ட காலத்திற்கு முன்பு உங்களுடன் ஒரு விளம்பரத்திற்காக பணியாற்றியது எனது மிகப்பெரிய பாக்கியம். இத்தனை அருமையான பாடல்களை நடன இயக்கம் செய்ததற்காக உங்களுக்கு மிகப்பெரிய நன்றி!’ என்று பதிவிட்டுள்ளார்.


சரோஜ் கான் இதற்கு முன்பு பிரியாமணியை பாராட்டி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பிரியாமணி நடிகை ஸ்ரீதேவியை நினைவு படுத்துவதாக அவர் பாராட்டியிருந்தார். சரோஜ் கானின் மறைவிற்கு இந்திய திரையுலகைச் சேர்ந்த அனைவரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Share this story